Monday, July 13, 2009

potpainting3








பானை அலங்காரம் 3

தேவையான பொருட்கள்:
மண்பானை 1
சிவப்பு எனாமல் கலர் 50மில்லி
வார்னிஷ்
செராமிக்பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
பாலித்தீன் கவர்
கத்தரிக்கோல்
ரங்கோலி கலர் பவுடர்
கண்ணாடி உருண்டை வடிவம்
கோல்டன் கலர் 3டி அவுட்லைனர்.

செய்முறை:

முதலில் பானையை கழுவி காயவிடவும்
காய்ந்ததும் சிவப்பு எனாமல்கலர் அடித்து காய்ந்ததும் மறுபடி இன்னொரு கோட் அடிக்கவும் அப்பொழுதுதான் ஷைனிங்காக இருக்கும்.
பாலித்தீன் கவரை கோன்போல் செய்துக்கொள்ளவும்.
செராமிக்பவுடரில் தேவையான கலர்பவுடரை சேர்த்து ஃபெவிக்கால்விட்டு கலந்துகொள்ளவும் மேலும் பேஸ்ட் போல் வருவதற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை கோனுக்கு மாற்றி டேப் போட்டு ஒட்டவும்.
கோனில் சிறு ஓட்டை போட்டு டிசைனை வரையலாம்.இந்த பானையில் முதலில் உருண்டை வடிவம் வரைந்து அதன் மேலும் கீழும் அவுட்லைன் போடவும், மேலும்
கற்பனைக்கு ஏற்றவாரு டிசைன் செய்து, ரவுன்ட் ஷேப்பில் கண்ணாடி பதித்து சுற்றி கோல்டன் க்ளிட்டர் கலரை அவுட்லைன் கொடுக்கவும்.
முழுவதும் முடிந்து காய்ந்ததும் வார்னிஷ் அடிக்கவும்.இதனால் இன்னும் ஷைனிங்காக இருக்கும்.

2 comments:

GEETHA ACHAL said...

மிகவும் அழகாக இருக்கின்றது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

dharshini said...

thanks geetha..

LinkWithin

Blog Widget by LinkWithin