Monday, September 20, 2010

பானை அலங்காரம்- 5



பானைக்கு முதலில் கறுப்பு ஃபேப்ரிக் கலர் கொடுத்து காயவிடவேண்டும்.காய்ந்ததும் பிங்க் பியர்ல் கலர் கொடுத்து(தேவைப்பட்டால் மீடியம் சேர்த்துக்கொள்ளலாம்) ஜாயிண்ட் இடங்களைதவிர மீதி இடங்களில் அடித்து கொள்ளலாம். காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பானை ரெடி.

மேலும் இது மினியேச்சர் ரோஸ் என்பதால் சிறு விளக்கத்துடன்....
க்ளேவை 5 பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த 5 பாகத்தை ஒவ்வொரு பாகத்தையும் இரண்டாக பிரித்து சிவப்பு டார்க் மற்றும் லைட் ஷேட் கலர் கொடுத்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் இவ்வாறு மீதியுள்ள க்ளேவிற்கும் எந்த கலர் தேவையோ இரண்டு ஷேட் கலர் கொடுத்து ஸிப்லாக் கவரில் வைத்துகொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது எடுத்து ரோஜாப்பூக்கள் செய்துக்கொள்ளலாம்.
முதலில் சிறிது எடுத்து திலகம் போல் உருட்டி கொள்ள வேண்டும்.இன்னொரு சிறு உருண்டை எடுத்து தட்டையாக்கி அந்த திலகத்தின் மேல் ஒட்டினால் இதழ் போல் இருக்கும் இவ்வாறுஒன்ரின் மேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டே வரவேண்டும்.இப்படியே அனைத்து ரோஜாக்களும் செய்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒவ்வொரு பானைக்கும் ஒரேகலரில் உள்ள ரோஜாக்களை 4,5 அடுக்கலாம்.
பார்ப்பதற்கு அழகான கண்ணைகவரும் பானை மற்றும் ரோஜாக்கள் ரெடி.





LinkWithin

Blog Widget by LinkWithin